மீண்டும் நான் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்புவேன் அதிரடி பேட்டி அளித்த – நட்சத்திர வீரர்

- Advertisement -

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அந்த அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை இந்த இந்தூரில் துவங்க உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். மேலும் இந்த தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளதால் அதற்கான சிறப்பு பயிற்சியும் இந்திய வீரர்கள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனாக ரஹானே பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : இந்திய ஒருநாள் அணிக்கு நான் மீண்டும் திரும்ப முடியுமா என்ற கேள்விகள் இடம்பெறுகின்றன. அதற்கு நான் அளிக்கும் பதில் ஒன்றே ஒன்றுதான் டெஸ்ட் போட்டிகளில் நான் தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டியது அவசியம். அவ்வாறு தொடர்ந்து நான் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் என்னால் ஒருநாள் அணியில் இடம்பிடிக்க முடியும் என்று நம்புகிறேன.

Rahane

கண்டிப்பாக என்னுடைய மன நிலையும், தொழில்நுட்பமும் இந்த தொடரில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் உட்பட்டு வருவதால் இதில் நான் சிறப்பாக விளையாடி ஒருநாள் அணிக்கான தேர்வாளர்களின் பார்வையை கண்டிப்பாக ஈர்ப்பேன் என்றும் ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement