100 ஆவது டெஸ்டில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய லயனுக்கு ரஹானே வழங்கிய பரிசு – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் 19ம் தேதியுடன் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்களைக் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் மட்டும் எடுத்து இருந்ததால் அவுஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலை வகித்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.

pant

ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. அப்போது இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் புஜாரா 56 ரன்கள், சுப்மன் கில் 91 ரன்கள் மற்றும் ரிஷப் பண்ட் 89 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ஏற்கெனவே மெல்போர்ன் மைதானத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது இந்திய அணி. பிரிஸ்பேனில் நடந்த இறுதி டெஸ்ட் போட்டி தான் ஆஸ்திரேலியா ஸ்பின்னர் நாதன் லயனின் 100வது டெஸ்ட் போட்டியாகும். தனது 100வது டெஸ்டில் லயன் 3 விக்கெட்களை வீழத்தி சிறப்பாக விளையாடி இருந்தார்.

lyon 2

லயனின் இந்த சாதனைக்கு பலரும் பாராட்டி வந்தனர். அந்தவகையில் பிரிஸ்பேனில் போட்டி முடிந்தவுடன் இந்திய கேப்டன் ராஹானே நாதன் லயனை அழைத்து பாராட்டினார். அப்போது ராஹானே இந்திய ஜெர்சி ஒன்றில் தனது ஆட்டோகிராப் போட்டு நாதன் லயனுக்கு பரிசாக வழங்கினார். ஆஸ்திரேலிய ஸ்பின்னர் லயனை கௌரவப்படுத்திய பின்னர் ராஹானே கோப்பையை பெற்றார்.

lyon

மேலும் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் இந்த ஜெர்சியில் தங்களது ஆட்டோகிராப்களை போட்டனர். என்னதான் ஆஸ்திரேலிய அணி இந்த தொடர் முழுவதுமே இந்திய வீரர்களை வம்புக்கு இழுத்தாலும் இந்திய வீரர்களின் இந்த கனிவான குணம் ரசிகர்களை மிகவும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement