கோலி கூட மறந்துட்டாரு. ஆனால் அஷ்வினை மறக்காமல் பாராட்டிய ரஹானே – இதை கவனிச்சீங்களா ?

Ashwin-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினால் 337 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ishanth 1

- Advertisement -

அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்கள் குவித்துள்ளது.

மேலும் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நாளை கடைசி நாளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மேலும் இம்முறை அவர் வீழ்த்திய இந்த 6 விக்கெட் சாதனையை சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 28 முறை அவர் அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ashwin 2

இந்நிலையில் இன்றைய போட்டியில் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தியதும் கேப்டன் கோலி கூட செய்யாத ஒரு காரியத்தை ரஹானே செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது 5 விக்கெட்டுகளை வீழ்த்திய போது நேராக அவரிடம் சென்ற துணை கேப்டன் ரகானே அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் அது தவிர அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அதேவேளையில் கோலி அவரை பாராட்டினாலும் அது மிக இயல்பாக இருந்தது.

Ashwin 3

இருப்பினும் ரஹானே மற்றும் அஸ்வினுக்கு இடையே உள்ள புரிதல் அவ்வப்போது இதுபோன்ற சூழ்நிலைகளில் வெளிப்படுகிறது. ஏற்கனவே பந்துவீச்சாளர்களின் கேப்டன் என்று அழைக்கப்படும் ரஹானேவிடம் முதல் இன்னிங்சில் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்று அஸ்வின் ஆலோசனை பெற்று பந்துவீசியது அப்போது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது ரஹானேவின் இந்த செயலும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement