கோலிக்கும் இவருக்கும் இடையேயான மோதல் நடைபெறும். பாக்க தயாரா இருங்க – மிரட்டல் விடுத்த தெ.ஆ கேப்டன்

De Kock
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்தானது. அதன் பிறகு தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

IND-vs-SA

- Advertisement -

மொஹாலி மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்திய அணியும், தென் ஆப்பிரிக்க அணியும் இரவு 7 மணிக்கு நேருக்கு நேர் சந்திக்கின்றன. இந்நிலையில் இன்றைய போட்டி குறித்து பேட்டியளித்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டிகாக் கூறியதாவது : இந்த போட்டியில் இந்திய அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையே கடுமையான சவால் நடக்கும்.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியை வீழ்த்துவதற்காக எங்கள் அணியின் இளம் வீரர் ரபாடா தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் அவரது விக்கெட்டை வீழ்த்தும் நோக்கில் இருக்கும் அவர் இன்று நிச்சயம் கொல்கி விக்கெட்டை கைப்பற்றுவார் என்று நம்புகிறோம். கோலிக்கும், ரபாடாவிற்கும் இடையே நடக்கும் மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

Rabada

இருவரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று இன்றைய போட்டியின் முடிவில் தான் தெரியும் இதனால் இன்றைய ரசிகர்களுக்கு மிகவும் சுவாரசியமாக அமையும் என்று டிகாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement