- Advertisement -
ஐ.பி.எல்

அந்த 2 பேர் இல்லாதல் சறுக்கிட்டோம்.. காயத்துடன் கம்பேக் பண்ணிட்டேன்.. ஆர்சிபி’யை வீழ்த்திய அஸ்வின் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருவை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அதனால் சென்னையில் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்ள ராஜஸ்தான் தகுதி பெற்றது. மறுபுறம் தோல்வியை சந்தித்த பெங்களூரு தொடரிலிருந்து வெளியேறியதால் 17வது வருடமாக கோப்பையை வெல்ல முடியாமல் பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது.

மே 22 ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 33, ரஜத் படிடார் 34, மஹிபால் லோம்ரர் 32 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான், 3 ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் சேசிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் 45, ரியான் பராக் 36, ஹெட்மயர் 26, ரோவ்மன் போவல் 16* ரன்கள் 19 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் அஸ்வின்:
அதனால் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. ராஜஸ்தானின் இந்த வெற்றிக்கு கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகிய இருவரது விக்கெட்டுகளை ஒரே ஓவரில் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஜோஸ் பட்லர், ஹெட்மயர் ஆகியோர் இல்லாததால் சமீபத்திய போட்டிகளில் சறுக்கிய தாங்கள் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளதாக அஸ்வின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடிய போது ஏற்பட்ட காயத்துடன் இத்தொடரில் விளையாடுவதாக தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சராசரி ஸ்கோரை அடிப்பதற்கே எங்களுடைய பேட்டிங் தடுமாறியது. ஏனெனில் நாங்கள் பட்லரை இழந்தோம். ஹெட்மயர் காயத்தை சந்தித்தார். இப்போட்டியில் சேசிங் செய்வதற்கு நாங்கள் அவசரப்பட்டோம் என்று நினைக்கிறேன். இருப்பினும் இந்த வெற்றியால் தன்னம்பிக்கை மீண்டும் வந்துள்ளது”

- Advertisement -

“ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் என்னுடைய உடல் நன்றாக நகரவில்லை என்று உணர்ந்தேன். எனக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. எனக்கும் வயதாகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்குவது கடினமானது. எனவே என்னுடைய ஃபார்மை கண்டுபிடிக்க கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஆனால் ஒரு முறை நீங்கள் ஐபிஎல் அணிக்காக வந்து விட்டால் தொடர் முழுவதும் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: 17 வருடம்.. ஆர்சிபி’யின் ஈ சாலா கோப்பை கனவை சுக்கு நூறாக உடைத்த ராஜஸ்தான்.. வீட்டுக்கு கிளம்பியது எப்படி?

“நாங்கள் சரியான லென்த்தில் பந்து வீசினோம் என்று நினைக்கிறேன். போல்ட்க்கு கொஞ்சம் ஸ்விங் மற்றும் வேகம் கிடைத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிக பனி இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. சேசிங்கில் எங்களுடைய பையன்கள் நன்றாக அடித்தனர். இளமையும் அனுபவமும் கலந்திருப்பதே எங்களுடைய பலமாகும். தற்போது ஹெட்மயர் வந்து விட்டார். போவல் சில பவுண்டரிகளை அடித்தார். நாங்கள் முன்னோக்கி செல்வதற்கான சரியான வேகத்தை பெற்றுள்ளோம்” என்று கூறினார்.

- Advertisement -