அவ்ளோ பந்து என் உடம்பில் பட்டும் வலியை பொறுத்துக்கொண்டு நான் அடிவாங்க இதுவே காரணம் – புஜாரா பேட்டி

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களை குவிக்க இந்திய அணி 336 ரன்களை குவித்தது இதன் மூலம் 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 294 ரன்களை அடித்து இரண்டாவது இன்னிங்சை முடித்துக் கொண்டது. அதன் பின்னர் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

siraj

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரை 300 ரன்களுக்கு மேல் அடிப்பது என்பது எப்போதும் சவாலான ஒரு விடயம் தான். அந்த வகையில் இந்த சவாலை விரட்டிய இந்திய அணி இன்று அசத்தலாக பேட்டிங்கை விளையாடி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக துவக்க வீரரான ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற தனது பொறுப்பை உணர்ந்து விளையாடிய கில் 91 ரன்கள் குவித்து சிறப்பான துவக்கம் கொடுத்தார்.

- Advertisement -

அதன்பின்னர் புஜாரா அரைசதம் அடித்தும், ரஹானே 24 ரன்கள் குவித்தும் ஓரளவு மிடில் ஓவர்களில் தாக்கு பிடித்தனர். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த போட்டியில் விளையாடியதைப் போலவே இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 138 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 89 ரன்களை அடித்தார்.

pant

தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளை சந்தித்த நிலையில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 22 ரன்களை அடித்தார். இவர்கள் இருவரும் இறுதியில் காண்பித்த அதிரடி மூலம் இந்திய அணி பெரிய இலக்கினை சேஸிங் செய்து வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றியை பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின்போது இரண்டாவது இன்னிங்சில் சிறப்பான தடுப்பாட்டம் விளையாடிய புஜாரா 200 பந்துகளுக்கு மேல் சந்தித்தார். அதிலும் குறிப்பாக பல பந்துகளில் அவர் வயிறு, முழங்கை, விரல், ஹெல்மெட் என பல்வேறு இடங்களில் அடி வாங்கினார். கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட பந்துகளை தனது உடம்பில் அடி வாங்கியும் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இப்படி தான் எதிரணி பவுலர்களின் பந்துவீச்சில் அடிவாங்கி களத்தில் நின்றதற்கு காரணம் என்னவென்று புஜாரா தற்போது விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Pujara 1

இந்த போட்டியின் போது நான் கம்மின்ஸ்க்கு எதிராக ஒரு புறத்தில் பந்துகளில் அடிவாங்கிக் கொண்டே இருந்தேன். ஏனெனில் மைதானத்தில் உள்ள விரிசல்கள் பந்து நன்றாக குத்தி எழுப்பும் வகையில் அமைந்தன. மேலும் அவரது பந்து இந்திய வீரர்களின் உடம்பை நோக்கியே வந்து கொண்டிருந்தன. நான் மட்டும் உடம்பில் அடி வாங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை பந்தை தடுத்து நிறுத்த விரும்பியிருந்தால் பந்து பேட்டில் பட்டு விக்கெட் விழுந்திருக்கும். விக்கெட்டுகள் அந்த சூழ்நிலையில் விழுந்தால் அது இந்திய அணிக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே பந்துகள் என் உடம்பில் பட்டாலும் சரி நான் போராட வேண்டும் என்று நினைத்தேன் என புஜாரா கூறியுள்ளார்.

pujara 2

அவரது இந்த பதில் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனெனில் அவ்வளவு பந்துகளையும் உடம்பில் வாங்கிய அவர் இந்திய அணி தோற்று விடக் கூடாது என்பதற்காகவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது நாடு திரும்பிய அவர் என் உடம்பில் எங்கெல்லாம் பந்து பட்டதால் அங்கு என் மகளின் அன்பு முத்தம் பட்டால் அத்தனை காயமும் மறைந்துவிடும் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement