த்ரிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட அஷ்வினின் மனைவி – திட்டி தீர்த்த அஷ்வின்

Trisha
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான அஸ்வின் கடந்த 2011 ஆம் ஆண்டு ப்ரீத்தி நாராயணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு அழகிய குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் அஸ்வினின் மனைவியான பிரீத்தி பிரபல நடிகை திரிஷாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அஷ்வினை வெறுப்பேற்றி உள்ளார். ஏனெனில் அஸ்வின் மிகத் தீவிரமான திரிஷாவின் ரசிகர். எனவே அவரை வெறுப்பேற்றும் விதமாக திரிஷாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவரை வெற்பேற்றியுள்ளார் அஸ்வினின் மனைவி.

இதனை கண்ட அஸ்வின் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை நிறுத்துங்கள் என்று செல்லமாக அவரது மனைவியை திட்டியுள்ளார். ஏனெனில் அவர் மிகப்பெரிய திரிஷாவின் ரசிகர் என்பதால் தான் எடுக்காத புகைப்படத்தை நீ ஏன் எடுத்தாய் என்று தனது பதிலை அவரது மனைவிக்கு டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே அஸ்வின் தனது இளம் வயதில் த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் வைத்துள்ளது வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement