தடை முடிந்தது. அதிரடி ஆரம்பித்தது. மீண்டும் புகுந்து விளையாடிய – ப்ரித்வி ஷா

- Advertisement -

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரான ப்ருதிவி ஷா இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 237 ரன்களை குவித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக அறிமுகம் ஆன இவர் தான் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Prithvi_Shaw

- Advertisement -

அடுத்த சச்சின் என்று புகழப்பட்ட இவர் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை இருமல் மருந்து கலந்து உட்கொண்டதாக இவர் மீது சோதனையில் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

இதனால் இவர் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட மார்ச் மாதம் 16ம் தேதியிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவருடைய தடைக்காலம் தற்போது 15ம் தேதியுடன் முடிவடைந்ததால் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டி20 தொடருக்கான மும்பையில் அணியில் மீண்டும் பங்கேற்றார்.

Prithvi

அதன்படி தடையில் இருந்து மீண்ட இளம் வீரர் ப்ருதிவி ஷா அசாம் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இந்த போட்டியில் 32 பந்துகளை சந்தித்த பிரித்வி ஷா அதிரடியாக அரைசதம் அடித்து தனது பேட்டை உயர்த்திக் காட்டி இனி என்னுடைய பேட்டிங் பேசும் என்பது போல சைகையை பெவிலியன் நோக்கி காண்பித்தார். இதன் மூலம் அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பி இருப்பதை சிம்பாலிக்காக கூறியிருக்கிறார்.

Advertisement