தோனி எப்போதுமே இப்படி பட்டவர் தான் – எம்.எஸ்.கே பிரசாத் அதிரடி கருத்து

Prasad
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பைக்கு பின் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஓய்வு குறித்து தோனி எந்தக் கருத்தையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Dhoni

- Advertisement -

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து விலகிய தோணி தற்போது ராணுவ பயிற்சி பெற இருப்பதால் பேராஷூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்று முதல் நாளாக விகடர் படையில் இணைந்து காஷ்மீர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசியதேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறியதாவது : குறுகிய ஓவர் போட்டிகளில் தோனி எப்போதுமே சிறப்பாக செயல்படுகிறார். உலக கோப்பை தொடரில் தோனி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இந்திய அணியின் பலமாக இருந்தவர் தோனி.

dhoni

அதோடு இன்றளவும் தோனி மிகச்சிறந்த பினிஷர் தான். தனது அனுபவத்தால் கேப்டனுக்கு அவ்வப்போது உதவி செய்து வருகிறார். தோனிக்கு இணையாக மற்றொருவரை உருவாக்க திட்டம் இருக்கிறது. அதன்படியே ரிஷப் பண்ட் அதிக முக்கியத்துவம் கொடுத்து அணியில் இணைத்து உள்ளோம் என்று கூறினார்.

Advertisement