சென்னை டெஸ்ட் : அஷ்வினை விட இவரே ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் – பிரக்யான் ஓஜா கருத்து

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

Ashwin

- Advertisement -

இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி அணிக்கு தேவையான நேரத்தில் இரண்டாவது இன்னிங்சின் போது 106 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கினை வகித்தார். அவரின் இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. மேலும் அவர் அதற்கு தகுதியான அளவிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த 2வது டெஸ்ட் போட்டியின் உண்மையான ஆட்டநாயகன் அஸ்வின் இல்லை எனவும் ரோகித் தான் ஆட்ட நாயகன் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரக்யான் ஓஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை போன்ற சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தில் முதல் நாளின்போது பேட்டிங் செய்வது மிகக் கடினமான ஒரு காரியம்.

rohith 1

அந்த சூழ்நிலையிலும் சிறப்பாக இந்த மைதானத்தின் தன்மையை அறிந்து விளையாடிய ரோஹித் 169 ரன்களை முதல் இன்னிங்சில் குவித்தார். ரோஹித் சர்மாவின் இந்த ஆட்டம் காரணமாகவே அடுத்து வரும் பேட்ஸ்மேன்களால் ரன்களை குவிக்க முடிந்தது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் அவர்தான். என்னை பொருத்தவரை அஸ்வினை விட ரோஹித் தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement