கோலிக்கு பதிலாக இங்கிலாந்து தொடரில் விளையாடும் 5 இளம் வீரர்கள்..! சென்னை வீரர் யார் தெரியுமா..?

rahul
- Advertisement -

அடுத்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி 2 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி ஐயர்லாந்து செல்கிறது. இந்த போட்டிக்கான அணி வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ ஏற்கனவே வெளியோட்டிருந்தது. இதை தொடர்ந்து ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது அந்த அணியின் கேப்டனாக கோலி செயல்படவிருக்கிறார்.

koli

- Advertisement -

தற்போது இருக்கும் நிலவரப்படி பார்த்தல் இங்கிலாந்தில் நடந்துவரும் கவுண்டி போட்டிகளில் விராட் கோலி, லண்டன் லாயல் கோப்பை போட்டிகளில் 3 ஒரு நாள் போட்டிகளிலும், அதனை தொடர்ந்து 2 கவுண்டி போட்டிகளிலும் விளையாட உள்ளார். இந்நிலையில் கோலிக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த போட்டிகளில் விளையாட்டுவது சந்தேகம் என்று தெரியவந்துள்ளது.

சமீபத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோலிக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் சிறிது தான் என்றாலும் அவ்ருக்கு சில நாட்களாவது ஒய்வு அவசியம் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கவுண்ட்டி தொடரிலும், ஜூலை மாதம் நடக்க உள்ள டி20 போட்டிகளிலும் கோலி ஆடுவாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் கோலிக்கு பதிலாக இங்கிலாந்து டி20 போட்டிகளில் யார் விளையடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வரிசையில் 5 இளம் வீரர்கள் அவருக்கு பதிலாக ஆடும் வாய்ப்பு இருக்கிறது.அதில்

shreyas

ஷ்ரேயாஸ் ஐயர் :- டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராக இவர் விராட் கோலிக்கு பதிலாக ஒரு நல்ல மாற்றாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 411 ரன்களை குவித்துள்ளார். மேலும் இவர் ஏற்கனவே இந்திய அணியில் 5 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

- Advertisement -

அம்பதி ராயுடு:- இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கிடைத்த ஒரு சிறந்த முன்னாள் மும்பை வீரர். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான இவர் சென்னையில் அணியிபட்டையைக் கிளப்பி வருகிறார். இதுவரை 15 போட்டிகளில் ஆடிய இவர் 586 ரன்களை குவித்துள்ளார்.

Ambathi Rayudu

சஞ்சீவ் சாம்சன்:- ஏற்கனவே இந்திய எ அணியில் இடம்பெற்றுள்ள இவர்,இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வந்த இந்த அதிரடி பேட்ஸ்மேன் 441 ரன்களை குவித்து அந்த அணியின் இரண்டாவது அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கே எல் ராகுல்:- அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்திற்கு எதிரான தொடர்களில் விளையாடும் இந்திய அணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளார். இளம் வீரரான இவர் இந்தியாவிற்காக 15 சர்வதேச போட்டிகளில் விளையாடி 500 ரன்களை குவித்துள்ளார். இந்த ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 581 ரன்களை குவித்துள்ளார்.

rahul

ரிஷாப் பண்ட்:- இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட் 511 ரன்களை குவித்துள்ளார். இந்த தொடரில் இவரது ஆட்டத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த (மே 10 )வியாழக்கிழமை அன்று ஹைட்ரபாத்திற்கு எதிரான போட்டியில் ரிஷாப் பண்ட் 63 பந்துகளில் 128 ரன்களை குவித்தது அவரது சிறந்த ஆட்டமாக அமைந்திருந்தது.

Advertisement