இவங்க 2 பேரும் எந்த பிரஷரும் இல்லாம ஆஸ்திரேலிய பவுலர்களை ஈஸியா அடிச்சிட்டாங்க – பாண்டிங் புகழாரம்

Ponting
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு முடித்துக்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாளில் 336 ரன்கள் குவித்து முடித்துக்கொண்டது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்துள்ளது.

Thakur

- Advertisement -

இந்த போட்டியின் துவக்க வீரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என அனைவரும் விரைவிலேயே விக்கெட்டை இழக்க இவ்வளவு பெரிய ரன்கள் இந்திய அணிக்கு வர காரணமாக இருந்தவர்கள் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தான் ஏனெனில் ரோகித் சர்மா, கில், புஜாரா, ரகானே, அகர்வால் என முன்னணி வீரர்கள் அனைவரும் 186 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இந்திய அணி குறைவான ஸ்கோர் தான் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் கூட்டணி அமைத்த சுந்தர் மற்றும் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரும் ஜோடியாக 123 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வலுவான நம்பிக்கை அளித்தனர். இதனால் இந்த போட்டி முடிந்து இவர்கள் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

sundar 1

இந்நிலையில் இந்த ஜோடியை பாராட்டி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது : ஷர்துல் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரு வீரர்களுமே ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு களத்தில் நிதானமாக விளையாடினர். ஆஸ்திரேலிய பவுலர்கள் இவரது விக்கெட்டை வீழ்த்த உண்மையிலேயே திணறினர்.

அந்த அளவிற்கு இவர்கள் இருவரது பாட்னர்ஷிப்பும் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் சிறப்பாக அமைந்ததாக ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் புகழ்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement