இவ்வளவு நாட்களில் நானும் அனுஷ்காவும் இப்படி இருந்ததில்லை. இது புதுசா இருக்கு – பீட்டர்சன் கேள்விக்கு சிரித்தபடி பதில் சொன்ன கோலி

Pieterson
- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதனால் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடனும் சக வீரர்களுடன் உரையாடுகின்றனர். இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல இந்திய வீரர்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.

Kohli

- Advertisement -

நேற்று காலை விராட் கோலியை வைத்து பேட்டி எடுத்தார். இந்த இருவருக்கும் இடையிலான பேச்சு ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியது. இந்த உரையாடலின்போது விராட் கோலியும், கெவின் பீட்டர்சனும் பல தெரியாத விஷயங்களை பற்றி பேசினார். இதில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேரத்தை செலவழிப்பது குறித்து பேசும்போது :

நாங்கள் இவ்வளவு காலம் ஆகியும் ஒரே இடத்தில் பல நாட்களாக இருந்தது இல்லை. இது மிகவும் வினோதமாக உள்ளது. தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தனியே செல்ல வேண்டிய அவசியமில்லை. ஒன்றாக இருப்பதற்காக இந்த நேரத்தை பயன்படுத்துகிறோம். நேர்மறையான மன்துடன் அனைவரும் இருக்க வேண்டும்.

Anushka

நான் என் மனைவியுடன் இல்லாமல் இருந்திருந்தால் சின்னசாமி மைதானத்தில் இருந்து இருப்பேன். மேலும் இவ்வளவு நாட்களில் மனைவியுடனும் தொடர்ந்து இதுபோல ஒன்றாக இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார் விராட் கோலி.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஜோடியான இவர்கள் எந்த வெளிநாட்டு தொடராக இருந்தாலும் ஒன்றாகவே நாட்டிற்கு சென்று ஓய்வு நேரங்களில் அங்கு உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்று புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது போன்ற பல புகைப்படங்களை அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளியிட்ட இருக்கின்றனர்.

anushka

தற்போது இந்தியாவில் அவர்கள் அதிகமாக நேரம் கழிக்கும் அதுவும் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் அவ்வப்போது கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் வீடியோவாக பதிந்து விழிப்புணர்வும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement