இனிமே இந்த மாதிரி தவறுகள் நடக்காது. நான் இனிமே ஒழுங்கா பன்ற – ஓபனாக பேசிய ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

Pant

- Advertisement -

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தோனி தேர்வு செய்யப்படாததால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக பண்ட் தொடர்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ச்சியாக சொதப்பி வரும் பண்ட் இந்நிலையில் அவர் தனது ஆட்டம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

டோனிக்கு பதிலாக இந்திய அணியில் நான் இடம் பிடித்து விளையாடி வருவது எனக்கு பெருமையான விடயம். நான் அவரின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறேன். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் எனது செயல்பாடு சற்று ஏமாற்றமாகவே அமைந்தது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த தொடருக்காக சிறப்பாக தயாராகி வருகிறேன்.

Pant

மேலும் ஒவ்வொரு நாளும் என்னுடைய ஆட்டத்தின் போக்கை மேம்படுத்தவும், எனது திறமையை அதிகரிக்கவும் கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன். எனவே இனிவரும் போட்டிகளில் என்னுடைய ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்னுடைய இடம் இந்திய அணியில் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து அதற்கேற்றார்போல் எனது பங்களிப்பை நான் நிச்சயம் இந்திய அணிக்கு வழங்குவேன் என்று பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement