இந்திய அணியின் ஓய்வறையில் இந்த சூழலே நிலவுகிறது – உண்மையை கூறிய பண்ட்

Pant
- Advertisement -

இந்தியா தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

bhuvi

- Advertisement -

தோனி இல்லாத காரணத்தினால் எனக்கு அதிக அளவில் பொறுப்பு உள்ளது. எனவே இனிவரும் ஒவ்வொரு போட்டிகளும் எனக்கு முக்கியமான போட்டி ஆகும். இனி வரும் ஆட்டங்களிலும் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் நான் களமிறங்கும்போதும் நான் சிறப்பாக ஆட வேண்டும் என்ற எண்ணத்துடனே மைதானத்திற்குள் நுழைவேன்.

என்னுடைய பங்களிப்பு அணிக்கு மிகவும் அவசியம் என்பதை நான் புரிந்துள்ளேன். எனவே என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இந்திய அணிக்கு வழங்குவேன். மேலும் இந்திய அணியின் ஓய்வு அறை குறித்து தவறான பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவை அனைத்தும் உண்மை இல்லை.

pant 1

எங்களுடைய ஓய்வு அறை மிகவும் அன்பாகவும், சுமுகமாகவும் உள்ளது. வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளன.ர் எங்களுக்குள் எந்த ஒரு கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் இந்த போட்டியை வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற நாங்கள் ஆயத்தமாக உள்ளோம் என்று பண்ட் கூறினார்.

Advertisement