கங்குலி சொல்வதை கேளுங்கள் கோலி. இவரை இந்திய அணியில் இருந்து நீக்குங்கள் – வலுக்கும் எதிர்ப்பு

Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

Pant

- Advertisement -

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சொதப்பலாக ஆடியதால் அவர் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

ற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுக்கும் படியும் மேலும் சரியான வீரர்களுக்கு சரியான முறையில் வாய்ப்பு அளிக்கலாம் என்று கூறியிருந்தார். இருப்பினும் பண்ட் மீது கோலி வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறார். ஆனால் பண்ட் தனது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

samson 2

ஏற்கனவே இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புக்காக சாம்சன், இஷான் கிஷான் போன்ற இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதால் பண்ட் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார். மேலும் அவர் இவ்வாறு தொடர்ச்சியாக சொதப்பலாக விளையாடிவருவதால் ரசிகர்கள் அனைவரும் பண்ட்க்கு பதிலாக வேறு வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாற்று தொடர்ந்து தங்களது கருத்துக்களை இணையத்தின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

Advertisement