இன்றைய போட்டியில் பண்ட் விளையாடுவாரா என்ற கேள்விக்கு வெளியான முக்கிய பதில் – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

pant 1

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேபோன்று தென்ஆப்பிரிக்க அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியின் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அவருக்கு சிலர் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறிவந்தனர். ஆனால் இன்றைய போட்டியிலும் பண்ட் விளையாடுவார் என்று தெரிகிறது. ஏனெனில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க இந்திய நிர்வாகம் கேப்டனும் விரும்புகின்றனர்.

அதே போன்று இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் அவர் நான்காவது வீரராக களம் இறங்க மாட்டார் மாறாக அவருக்கு பதிலாக ஐயர் நான்காவது இடத்திலும், பண்ட் 5வது இடத்திலும் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement