87 ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் மற்றும் பண்ட்க்கும் இடையே ஏற்பட்ட உரசல் – வைரலாகும் வீடியோ

Pant-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று 13-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்துள்ளது. துவக்க வீரர் ரோகித் சர்மா அதிகபட்சமாக 161 ரன்களையும், ரகானே 67 ரன்களும் குவித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 33 ரன்களுடனும், அக்ஷர் பட்டேல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Pant

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் முடியும் முன்னர் 87வது ஓவரின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் மற்றும் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவருக்குமிடையே ஒரு சிறிய உரசல் ஏற்பட்டது. அதாவது ஐந்து மணி ஆகியும் போட்டி முடியவில்லை என்ற காரணத்தினால் ரிஷப் பண்ட் போட்டியின் முதல் நாள் முடிந்ததா ? என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பண்டை நோக்கி வந்த ஸ்டோக்ஸ் சிறிது நேரம் அவரிடம் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இருப்பினும் அம்பயர்கள் தலையிட்டு அவர்கள் இருவரையும் விலக்கினார்கள். ஆனால் இருவருமே சிரித்துக்கொண்டு பேசியதால் இந்த விடயம் எந்த அளவுக்கு காரசாரமாக அமைந்தது என்று தெரியவில்லை.

இருப்பினும் அவர்களுக்கு இடையே என்ன நடைபெற்றது ? என்று இருவரில் ஒருவர் கூறினால் மட்டுமே தெரிய வரும். அதன் பின்னர் மேலும் ஒரு ஓவர் போடப்பட்டு 88 ஓவர்களில் போட்டி முடிவடைந்தது. அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற இந்த உரையாடல் ஆனது தற்போது இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement