கொரோனா லாக்டவுனிலும் ராஞ்சிக்கு நேரே சென்று தோனிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய வீரர் – வைரலாகும் புகைப்படம்

Sakshi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருரான தோனி நேற்று முன்தினம் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது இந்த பிறந்தநாளை ரசிகர்கள் #HappyBirthdayDhoni என்ற சிறப்பு ஹாஷ்டேக் மூலம் கொண்டாடி இணையத்தை தெறிக்க விட்டனர். மேலும் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலதரப்பட்ட திசைகளிலிருந்தும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்தது.

Dhoni-4

- Advertisement -

தோனியின் பிறந்தநாளுக்கு பல்வேறு வீரர்களும் பல்வேறு வகையில் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிக்க இந்திய அணியின் இளம் வீரரான ஹார்டிக் பாண்டியா செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு இ – பாஸ் அனுமதி பெற்று டோனியின் பிறந்தநாளை கொண்டாட அவர் தோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். மேலும் அவருடன் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியாவும் சென்றுள்ளார்.

மேலும் அவர் ராஞ்சியில் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் தனது தோனியின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Pandya

பாண்டியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே “பிட்டுவிற்கு” இந்த “சிட்டுவின்” பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தோனியுடன் நடித்த ஒரு விளம்பர படத்தின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.இந்நிலையில் தற்போது அவர் நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement