50 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடர் இங்கிலாந்து நாட்டில் கடந்த 30 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கருதப்படுகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் இளம் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்த உலக கோப்பை தொடர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ; நான் இந்திய அணியில் விளையாடுவதை என் கனவாக நினைத்தேன். அது இப்போது நனவாகி நான் விளையாடி வருகிறேன். மேலும் உலக கோப்பை தொடரில் ஆட வேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசை அந்த ஆசையும் தற்போது நிறைவேறியுள்ளது.
மேலும் இந்த உலகக் கோப்பையை வெல்வது இந்திய அணிக்கு எந்த அழுத்தமும் இல்லை. நமது அணி சிறப்பாக ஆடி வருகிறது. அதனால் கட்டாயம் இந்த உலகக் கோப்பையை நாம் கைப்பற்றுவோம்.
இருப்பினும் இந்த அழுத்தத்தை விட இந்திய மக்கள் அனைவரும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதே அழுத்தத்தைத் தருகிறது. உலக கோப்பையை வென்று அதை கையில் ஏந்த வேண்டும் அதுவே எனது ஆசை என்று பாண்டியா கூறினார்.