38 போட்டிகளுக்கு பிறகு நேற்றைய போட்டியில் பாண்டியா மற்றும் தவானுக்கு நடந்த அரிய நிகழ்வு – விவரம் இதோ

Dhawan-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

INDvsAUS Toss

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

pandya

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரரான ஹார்திக் பாண்டியா தவானுடன் சேர்த்து ஒரு விளையாடிய அரிய நிகழ்வு ஏற்பட்டது. இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு தவானும், 2016ம் ஆண்டு ஹார்டிக் பாண்டியாவும் அறிமுகமானார்கள். அதன் பின்னர் 2016 ல் இருந்து தற்போது வரை இவர்கள் கிட்டத்தட்ட 38 ஒருநாள் போட்டிகளில் ஒன்றாக இணைந்து விளையாடி உள்ளனர்.

Pandya-4

ஆனால் இருவரும் ஒன்றாக இணைந்து பேட்டிங் செய்ததே கிடையாது. பெரும்பாலும் பின்வரிசையில் களமிறங்கும் பாண்டியா இறுதி நேரத்தில் தோனி, பாண்டே, ராகுல் அல்லது பந்து வீச்சாளர்கள் உடனேயே பேட்டிங் செய்துள்ளார். இந்நிலையில் முதன்முறையாக நேற்றைய போட்டியில் தான் தவானுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. துவக்க வீரராக களமிறங்கிய தவான் 34.3 ஓவர்கள் வரை விளையாடி 5 ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

Advertisement