இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி இதுவரை தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தோனி ராணுவ பயிற்சி ஈடுபடுவதற்காக சில மாதங்களும், அதன் பின்னர் சில மாதங்கள் ஓய்வும் எடுத்துக்கொண்டார். ஆனால் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக அவர் எந்தவித கிரிக்கெட்டிலும் ஆடாமல் இருக்கிறார். அது மட்டுமின்றி இந்திய அணி தோனியை விட்டு இந்திய அணி தற்போது நகர்ந்து விட்டது என்றே கூறலாம்.
ஏனெனில் இந்திய அணியின் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலிலிருந்து டோனியின் பெயர் நீக்கப்பட்டதை அடுத்து தோனி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பது கடினம் என்று தெரியவந்துள்ளது.
ஆனாலும் தோனி இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் குடும்பத்தாருடன் இணைந்து ஜாலியாக நேரத்தை கழித்து வந்தார். மேலும் தற்போது சென்னை வந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தோனியின் ரசிகர்கள் தற்போது தோனியின் விளையாட்டை காண ஆவலாக உள்ளனர்.
இந்த ஆவல் இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கும் சென்று இருக்கிறது என்றே கூறலாம். பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகள் போன்ற டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த தொடரின் இஸ்லாமாபாத் மற்றும் முல்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
Bhai in Stadium!
Stadium was overcrowded. Full support for @IsbUnited
Missing @msdhoni @PSL pic.twitter.com/zuUsZoNT1s— Shehzad-Ul-Hassan (@shehzad441) March 8, 2020
அதன்படி அவர் அணிந்திருந்த டீசர்ட்டில் தோனியின் பெயரைப் பதிந்து ஏழாம் நம்பர் என்னையும் பதிவிட்டிருந்தார். போட்டி நடக்கும் போதே இவரது டீசர்ட் பலரது கவனத்தை ஈர்த்தது. போட்டி முடிந்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்ட ரசிகர் எங்களது முழுவதும் எப்போதும் தோனிக்கு உண்டு என்று அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.