இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டவசமின்றி தவறவிட்ட நிதிஷ் குமார் – அவருக்கு பதிலா சி.எஸ்.கே வீரர் தேர்வு

Nitish
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் எதிர்வரும் 29-ம் தேதியுடன் முடிவடையுள்ள வேளையில் அதற்கு அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்த அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்துவிட்டது. அதன்படி அறிவிக்கப்பட்ட அந்த அணியில் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் அனுபவ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

எனவே இந்த ஜிம்பாப்வே தொடருக்காக சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட புதிய அணி அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட அந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் அசத்தலாக செயல்பட்ட அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், நிதிஷ் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே ஆகிய வீரர்களுக்கு இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இவ்வேளையில் 21 வயதான ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பேட்டிங்கில் அசத்தலாக செயல்படுவதோடு மட்டுமின்றி பந்து வீச்சிலும் அசத்தக்கூடிய இவருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த காயத்திலிருந்து வெளிவர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : 31 வருடம் 19 தோல்வி.. ஆப்கானிஸ்தானை அசால்ட்டாக ஊதி வெளியேற்றிய தெ.ஆ.. வரலாற்று சாதனையுடன் ஃபைனலுக்கு தகுதி

இதன் காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement