அவர் ஒரு இழிவாக பேசக்கூடிய ஒரு ஆள். விராட் கோலியை சாடிய இங்கி முன்னாள் வீரர் – ரசிகர்கள் கொதிப்பு

nick
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிவடைய 2-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி துவங்கியதில் இருந்தே இரு அணிகளும் வெற்றிக்கான உத்வேகத்துடன் போட்டியிட்டனர். ஆனாலும் இங்கிலாந்து வீரர்கள் களத்தில் இந்திய வீரர்களை சீண்டியது, பதிலுக்கு இந்திய வீரர்கள் அவர்களை சீண்டியது, வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட வார்த்தைப் போர், உரசல்கள் என இந்த இரண்டாவது போட்டி கிட்டத்தட்ட ஒரு சுவாரசியமான திரைப்படத்தை போன்றே சென்றது.

bumrah

- Advertisement -

அந்த அளவிற்கு கடைசி நாள் வரை இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடினர். இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சுட்டிக்காட்டி இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நிக் காம்ப்டன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில் : விராட் கோலி மிகவும் இழிவாக பேசக்கூடிய ஒருவர். 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அவருக்கு எதிராக நான் விளையாடிய போது நான் மிரளும் அளவிற்கு என்னை நோக்கி அடுக்கடுக்காக வசைபாடினார். அதை நான் எப்போதும் மறக்க முடியாது.

nick 1

அவரது அந்த செயலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை காட்டிவிடும். கிரிக்கெட் உலகில் சச்சின், வில்லியம்சன், ரூட் போன்ற தலைசிறந்த வீரர்கள் எல்லாம் களத்தில் கண்ணியமாக நடந்து கொண்டவர்கள். ஆனால் அதற்கெல்லாம் நேர்மாறானவர் கோலி என்று அவர் சாடியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சாடிய இந்த இங்கிலாந்து வீரரை ரசிகர்களும் சாதாரணமாக விடவில்லை.

இந்த இரண்டாவது போட்டியின்போது இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து இந்திய வீரர்களை சீண்டியது உங்களுக்கு தெரியவில்லையா ? ஆண்டர்சன் மற்றும் பட்லர் ஆகியோர் வார்த்தைகளை உதிர்க்கவில்லையா ? என்று அவரின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement