2025 ஆம் ஆண்டு ரோஹித், கோலி எல்லாம் ரிட்டயர்டு ஆன பின்பு இந்திய அணி இப்படித்தான் இருக்கும் – அணி வீரர்களின் விவரம் இதோ

IND-2
- Advertisement -

தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர் குமார் என பல சீனியர் வீரர்களுக்கு 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் 5 வருடங்களில் இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்று விடுவார்கள் என்றே தெரிகிறது. அப்படிப்பார்த்தால் 2025 ஆம் ஆண்டு இந்திய அணி மிகவும் புதுவிதமான கட்டமைப்பில் இருக்கும்.

IND-2

- Advertisement -

இளம் வீரர்கள் பலரும் அணிக்குள் வந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட அணியினை தற்போது பார்ப்போம். இந்த அணியின் தொடக்க வீரர்களாக தற்போது 20 வயதான பிரித்வி ஷா மற்றும் 27 வயதான கேஎல் ராகுல் ஆகியோர் கண்டிப்பாக இருப்பார்கள். மிடில் ஆர்டரில் அப்போது 37 வயதாகி இருக்கும் விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் 28 வயதாகி இருக்கும் ரிஷப் பந்த் ஆகியோர் இடம் பிடித்திருப்பார்கள்.

ஆல்ரவுண்டர்களாக தற்போது 26 வயதாகும் ஹர்திக் பாண்டியா 19 வயது ஆகியிருக்கும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கண்டிப்பாக இடம் பிடித்திருப்பார்கள். இதில் வாஷிங்டன் சுந்தர் ரவிந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்பி இருப்பார்.

Pandya 3

சுழற்பந்து வீச்சாளராக ரவி பிஷ்நோய் என்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் சுழற்பந்துவீச்சாளர் இருப்பார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக நவ்தீப் சைனி தீபக் சாஹல், கலீல் அகமது ஆகியோர் இடம் பிடித்திருப்பார்கள்.

- Advertisement -

2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச அணி இதோ :

பிருத்வி ஷா, கே.எல்.ராகுல்,விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த்,ஹார்டிக் பாண்ட்யா வாஷிங்டன் சுந்தர்,ரவி பிஷ்னோய், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், கலீல் அகமது

Advertisement