50 ஓவர் உலக கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் தற்போது சிறந்த உலகக்கோப்பை அணி பட்டியல் தயார் செய்து தனது அணியை வெளியிட்டது ஐ.சி.சி
இதனைப் போன்றே உலக கோப்பையில் சிறந்த அணியை முன்னாள் வீரர்கள் பலர் தேர்வு செய்து வருகின்றனர். இந்த உலக கோப்பையின் சிறந்த வீரர்கள் கொண்ட அணியை சச்சின், கவாஸ்கர் போன்ற பலரும் தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கடுத்து இந்திய அணியின் முன்னாள் பாஸ்ட் பவுலர் நெஹ்ரா தேர்வு செய்துள்ளார்.
இந்த உலககோப்பையின் சிறந்த தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் வார்னரை அவர் தேர்வு செய்துள்ளார். மேலும் மூன்றாவது வீரராக கோலியையும் 4-வது வீரராக வில்லியம்சன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஆல்-ரவுண்டராக சாகிப் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரை செய்துள்ளார் நெஹ்ரா.
அவருடைய உலக அணியில் தோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார் மேலும் சாஹலை தேர்வு செய்துள்ளார். பாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஆர்ச்சர் மற்றும் ஸ்டார்க் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். மேலும் யாரும் தேர்வு செய்யாத தோனியை இவர் கேப்டனாக தேர்வு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நெஹ்ரா கடைசியாக தோனியின் தலைமையில் விளையாடியதால் அவரை கேப்டனாக தேர்வு செய்து இருக்கிறார் என்று ரசிகர்கள் நெஹ்ராவின் தேர்வு குறித்து கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.