ஓய்வு அறையில் கோலியின் பாராட்டுகளை பெற்ற தமிழக வீரர். டீம்ல இனிமே தொடர்ச்சியா ஆடுவாரு – பாண்டியா பகிர்ந்த தகவல்

- Advertisement -

இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் அணியின் மிகப்பெரிய சொத்தாக மாறிக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக கடைசி ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய இவர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதற்கு முன்னதாக ஹைதராபாத் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான் வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அதன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தார். டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளும் இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

nattu

- Advertisement -

குறிப்பாக இரண்டாவது போட்டியில் மற்ற பந்து வீச்சாளர்களின் பந்துகளை எல்லாம் சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறந்துக் கொண்டிருந்த நிலையில் நடராஜனின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் தொட்டுப்பார்க்க பயப்பட்டனர். துல்லியமாக பந்துவீசிய நடராஜன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து முடித்தார். 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் நடராஜன்.

இந்த போட்டி முடிந்த பின்னர் நடராஜன் குறித்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வாய்நிறைய புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “நடராஜன் குறித்து நான் பேசியாக வேண்டும். இந்த ஆட்டநாயகன் விருது அவருக்கு தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு தகுதியான நபர் அவர்தான், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன் கொடுத்துக் கொண்டிருந்தபோது இவர் மட்டும் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து ஆடினார்.

nattu 1

நடராஜன் மிக எளிமையாக இருக்கிறார். எளிமையாக திட்டம் தீட்டுகிறார். அதுதான் அவருக்கு வெற்றியை கொடுக்கிறது. இப்படி எளிமையாக இருக்கும் நபர்கள் தான் அணிக்கு தேவை. அவர்கள் தான் அனைவரையும் கவர்ந்து விடுகிறார்கள். அவரிடம் என்னையும் கவர்ந்து விட்டது” என்று கூறியிருக்கிறார்.

nattu 1

இதனைத் தாண்டி போட்டி முடிந்த பின்னர் வீரர்களின் ஓய்வு அறையில் நடராஜன் குறித்து வீரர்கள் அனைவரின் முன்னிலையிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் பாராட்டியிருக்கிறார். இப்படி தொடர்ந்து அனைவரின் முன்னர் பாராட்டு விழாவில் நடராஜன் மகிழ்ச்சியாகவும் அணியில் நம்பிக்கையான வீரராகவும் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. கோலியை கவர்ந்து அவரிடமே பாராட்டுகளை பெற்றுள்ளதால் இனி இந்திய அணியில் தொடர்ந்து அவர் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement