ஆனந்த் மஹிந்திரா பரிசாக அளித்த காரை தனது பயிற்சியாளருக்கு கொடுத்த நடராஜன் – நன்றி மறக்காத நட்டு

Nattu
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கடந்த ஐபிஎல் தொடரின்போது சன்ரைஸ் அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பவுலராக இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவிற்கு நெட் பவுலராக சென்ற நடராஜன் அங்கு வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாகி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Nattu

- Advertisement -

மேலும் அந்த ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இளம் வீரர்களின் நடராஜன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டுமின்றி இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாட்டால் அந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரையும் அசத்தலாக இந்திய அணி கைப்பற்றியது. அப்போது இந்திய அணியில் இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, சுப்மன் கில், சிராஜ் ஆகியோர் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக முதன்முறையாக அறிமுகம் ஆகி இருந்தனர்.

இதனால் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மஹிந்திரா இந்த ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான அனைத்து இளம் வீரர்களுக்கும் மஹிந்திரா தார் என்கிற ஒரு காரை பரிசாக அளிப்பதாக அறிவித்திருந்தார்.

nattu 1

கடந்த ஜனவரி மாதம் அறிவித்தபடி எல்லோருக்கும் சில தினங்களுக்கு முன்னர் கார் பரிசாக அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு கிடைத்த இந்த மஹிந்திரா தார் காரை தனது பயிற்சியாளரும், வளர்ச்சிக்கு முக்கியமான இருப்பவருமான ஜெயபிரகாஷ்க்கு பரிசாக அளித்துள்ளார் நடராஜன். மேலும் அவருக்கு காரை பரிசாக அளித்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

nattu 2

குடும்ப கஷ்டத்தில் வறுமையில் வாடிய நடராஜனை அழைத்து கிரிக்கெட் பயிற்சி கொடுத்து இவ்வளவு தூரம் முன்னேற்றிய ஜெயபிரகாஷ் செய்த நன்றியை மறக்காமல் என்றும் நினைவுகூரும் நடராஜன் இன்றளவும் அவரின் மீது மதிப்பு குறையாமல் தனக்கு கிடைத்த காரை அவருக்குப் பரிசாக அளித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement