அறுவைசிகிச்சைக்கு பின் BCCI-யை டேக் நடராஜன் வெளியிட்ட புகைப்படம் – என்ன சொல்லியிருக்காரு பாருங்க

Nattu
- Advertisement -

இந்திய அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளரும், சன் ரைசர்ஸ் அணியின் முதன்மை பந்து வீச்சாளரும் ஆன நடராஜன் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன் மூலம் ஆஸ்திரேலியா சென்ற அந்த தொடரில் இடம் பிடித்து மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாடி சாதனை படைத்தார். அந்த தொடரிலும் தொடர்ச்சியான தனது சிறப்பான பௌலிங் மூலம் அனைவரையும் கவர்ந்தார் நடராஜன்.

Nattu-2

- Advertisement -

அடுத்து சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பிடித்திருந்த நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இன்னும் 2 மாதங்களில் டி20 உலக கோப்பை தொடர் துவங்க இருக்கும் இவ்வேளையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி டி2 உலகக்கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்யலாம் என்று நினைத்த நடராஜனுக்கு இந்த வருடம் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது.

அதற்கடுத்து அவருக்கு பதிலாக கலீல் அகமதுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. முதலில் அவரது நீக்கத்திற்கான காரணத்தை வெளியிடாத சன்ரைஸ் நிர்வாகம் அதன் பிறகு அவர் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாகவே போட்டிகளில் விளையாடாமல் இருக்கு இருப்பதாகவும் விரைவில் அந்த காயம் குணமடைவதற்கான அறுவை சிகிச்சைகள் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவலை வெளியிட்டிருந்தது.

அதன் காரணமாக ஐ.பி.எல் இருந்து விலகிய நடராஜன் தற்போது வெற்றிகரமாக தனது கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து நடராஜன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது

இந்த சூழ்நிலையில் தனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்த மருத்துவக்குழு, டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் பி.சி.சி.ஐ-யால் செய்யப்பட்டது என்பதால் அவர்களையும் டேக் செய்து நடராஜன் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement