ஆஸ்திரேலிய தொடரில் வேறு யாரும் செய்யாத அதிசயத்தை நிகழ்த்திய நடராஜன் – இதை கவனிசீங்களா ?

Nattu
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 66 ரன்கள் குவிக்க இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் 303 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரரான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார்.

IND

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சைனிக்கு பதிலாக அறிமுகப் போட்டியில் விளையாடிய நடராஜன் 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி வெற்றி பெற்றது மட்டுமின்றி இவரது சிறப்பான பந்துவீச்சுக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இவர் இன்னும் தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவார் என்றும் அவரது திறமை நிச்சயம் சர்வதேச அளவில் வெளிப்படும் என்றும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் நடராஜன் ஒரு சிறப்பான செயல் ஒன்றினை செய்துள்ளார் அது யாதெனில் இந்த தொடரின் இந்த சீசனில் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எதிராக மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். மேலும் கடந்த இரண்டு போட்டிகள் ஆகவே பவர் பிளே ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட இந்திய அணி பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. மேலும் துவக்க விக்கெட் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தது.

nattu 1

ஆனால் நேற்றைய மூன்றாவது போட்டியில் வார்னருக்கு பதிலாக லாபுஷேன் இறங்கினார். இந்த தொடரில் பவர்பிளே ஓவர்களில் விழுந்த முதல் விக்கெட் அவருடையது தான். நடராஜனின் வீசிய 6-ஆவது ஓவரில் லாபுஷேன்னை ஆட்டமிழக்கச் செய்தார். இந்த சீசனில் பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற பெருமையும் அவர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement