நடராஜனிடம் ரஹானே கேட்டுக்கொண்ட இந்த விஷயம் அடுத்த போட்டியில் நடக்குமா ? – ரசிகர்கள் ஏதிர்பார்ப்பு

Nattu
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இந்நிலையில், தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது.

Gill

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன்கள் பர்ன்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட் ஆகி உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கிரிஸ் கிரீன், டிம் பெய்ன் ஆகியோர் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா (4) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்(3) ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது விக்கெட்டை இழந்து 195 ரன்களை குவித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை பெற்று 131 ரன்கள் முன்னிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களை பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 70 எடுத்தால் வெற்றி இழக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

umesh

இரண்டாவது இன்னிங்சில் உமேஷ் யாதவ் தனது 3.3 வீசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று தசைப்பிடிப்பு ஏற்பட்டு மைதானத்திலிருந்து ஓய்வறைக்கு சென்று விட்டார். ஏற்கனவே விராட் கோலி மற்றும் முகமது ஷமி இல்லாத இந்திய அணியில் தற்போது இவரும் வெளியேறியது மாபெரும் இழப்பாக இருக்கிறது. மேலும் அவர் வெளியேறிய பின்னர் மீண்டும் பந்துவீச வராததால் அவர் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. பி.சி.சி.ஐ யும் உமேஷ் யாதவ் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறியுள்ளது.

nattu 1

இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவருக்கு பதிலாக யார் அணியில் இடம் பெறுவார்கள் என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இதற்காக நவ்தீப் சைனி மற்றும் நடராஜன் போட்டி போடுகிறார்கள். ஒருநாள் மற்றும் டி20 தொடரின் சிறப்பான விளையாடியதால் டெஸ்ட் தொடரின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடராஜன் வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசியதால் ரகானே நடராஜனை எப்போது வேண்டுமென்றால் தயாராக இருக்க வேண்டும் என்று ரஹானே ஏற்கனவே கூறியிருந்தார். அது தற்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement