இந்திய அணியை இவர் பெரும் பலம் வாய்ந்த அணியாக மாற்றி வைத்திருக்கிறார் – நாசர் உசேன் புகழாரம்

hussain
- Advertisement -

ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வர இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

IND-1

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டியும் சென்னையில் நடைபெற அடுத்த இரண்டு போட்டியும் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நாசர் உசேன் இந்த இந்திய அணிக்கு எதிரான தொடர் குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய மண்ணில் அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகும் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் அந்த தொடரை வென்றது.

Rahane

அணியின் கேப்டன் கோலி அணியில் இல்லை மேலும் அனுபவம் வீரர்களுக்கு தொடர்ச்சியான காயம் என பல தடைகளை கடந்து இந்திய அணியின் இளம் படை அதனை வென்று காட்டியது. இந்திய அணி தற்போது வலிமைமிக்க ஒரு அணியாக மாறியுள்ளது. இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். இதற்கெல்லாம் காரணம் கோலி தான். கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியை வலுவான அணியாக கட்டமைத்து வைத்துள்ளார். இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

INDvsENG

மேலும் இந்திய அணியை தற்போது வீழ்த்துவது என்பது மிகவும் கடினம் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பியுள்ளது. அதே வேளையில் இந்திய அணியும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி அவர்களது மண்ணிலேயே வீழ்த்தி இந்தியாவிற்கு திரும்பி உள்ளதால் இந்த தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement