கங்குலியும் நானும் காதலித்தோம்..! எங்கள் பிரிவுக்கு இவர்கள்தான் காரணம்..! உண்மையை உடைத்த நக்மா..!

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டிற்கும் , பாலிவுட் சினிமாவிற்கும் எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து தான் வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல பேர் இந்தி நடிகைகளை காதலித்துள்ளனர். அதில் சிலரது காதல், திருமணத்திலும் முடிந்துள்ளது. இந்நிலையில் பிரபல இந்திய நடிகை நக்மா கங்குலி உடனான தனது பிரிவு குறித்து சமீபத்தில் கூறியுள்ளார்.
Gangully
2000 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வளர்ந்து வந்த காலம் அது. அப்போது அனைத்து பத்திரிகைகளின் பக்கத்திலும் கங்குலி மற்றும் நடிகை நக்மாவிற்கு இடையேயான காதலை குறித்து பக்கம் பக்கமாக செய்திகள் வெளியாகி வந்தது.

அப்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மாவும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கங்குலியும் காதலித்து வருகின்றனர் என்று அனைவராலும் பேசப்பட்டது. ஆனால், இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு வரை தங்களது காதல் குறித்து மௌனம் சாதித்து வந்தனர்.இந்நிலையில் சமீபத்தில் கங்குலிவுடனா காதல் குறித்து சமீபத்தில் மௌனம் களைத்த நக்மா கூறுகையில் ‘ எங்கள் இருவருக்கும் பின்னால் எங்களது கேரியர் ஒரு சுமையாக இருந்தது. கங்குலி சரியாக போட்டிகளில் விளையாடாத போது ரசிகர்கள் எங்களை குறை கூறினார்கள்.

அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு எங்களது உறவு தடையாக இருந்ததால் நாங்கள் அதனை முறித்துக் கொள்ள தயா ரானோம். எங்கள் மீது விமர்சனங்கள் அதிகரிக்க எங்கள் இருவருக்கும் இருந்த ஈடுபாடு குறைய துவங்கியது. பின்னர் நாங்கள் இருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்வில் சந்தோசத்தை தேடி பயணிக்க தொடங்கிவிட்டோம்.’ என்று தெரிவித்துள்ளார். இறுதியில் எங்கள் இருவரது உறவும் ஒரு நல்ல விடயத்திற்காக தான் முறிந்தது என்பதில் மகிழ்ச்சி தான். தற்போதும் கங்குலி மீது நான் நல்ல மரியாதை வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகை நக்மா.

- Advertisement -
Advertisement