தோனி கடைசி நாள் ஓய்வறையில் என்னிடம் இதைத்தான் சொன்னார். நான் அதனை செய்து காட்டிவிட்டேன் – நதீம் பெருமிதம்

Nadeem
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தென்னாபிரிக்க அணியை 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

Nadeem

- Advertisement -

இந்நிலையில் போட்டியின் நான்காவது நாளான அன்று இந்திய அணியின் வீரரான தோனி இந்திய அணி வீரர்களை மைதானத்தில் உள்ள ஓய்வறையில் சந்தித்தார். அப்போது வீரர்களிடம் பேசிக்கொண்டிருந்த தோனி நதீமுக்கு சில ஆலோசனைகளை வழங்கிய படி இருந்த புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டது.

அந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்தில் இணையத்தில் வைரலாகிய நிலையில் தற்போது அதுபற்றி நதீமிடம் கேட்டபோது நதீம் அளித்த பதிலாவது : போட்டிக்கு முன்பாக என்னை தோனி நேரில் சந்தித்தார். அப்போது ஆட்டம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று நான் தோனியிடம் கேட்டேன். அதற்கு தோனி என்னிடம் கூறியதாவது : உனது பந்துவீச்சை நான் பார்த்தேன்.

Nadeem

இப்போது உன் பந்துவீச்சில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் தான் இந்த போட்டியில் உன்னை சிறப்பாக பந்து வீச செய்கிறது. மேலும் உனது பயணம் இப்பொழுது தொடங்கி விட்டது அதற்கு வாழ்த்துக்கள் நிச்சயம் நீ இந்த போட்டியில் மீதி உள்ள விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று தெரிவித்தார். அதன்படி நான் கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றேன் என்று நதீம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement