நேற்றைய போட்டியில் கடைசி விக்கெட்டில் நடந்த சுவாரசியம் பற்றி தெரியுமா ? – விவரம் இதோ

Nadeem
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. மூன்றாம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்க அணி நான்காம் நாள் காலை போட்டி துவங்கிய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த போட்டியின் கடைசி 2 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் நதீம் அடுத்தடுத்து வீழ்த்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதிலும் கடைசியாக விழுந்த விக்கெட் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வாகும். அது யாதெனில் நதீம் வீசிய பந்தை தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா எதிர்கொண்டார்.

மெதுவாக வந்த அந்த பந்தை ரபாடா ஓங்கி அடிக்க அந்த பந்து எதிரில் நின்ற வீரர் மீது பட்டு நதீம் அதனை காட் அண்ட் போல்ட் முறையில் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். பந்து தன்மீது படக்கூடாது என்று தன்னை காத்துக்கொள்ள எதிரில் இருந்த வீரர் குனிய அவர் மீது பந்து பட்டு அதனை லாவகமாக நதீம் கேட்ச் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement