ஒருநாள் போட்டியில் அறிமுகமான நடராஜன். தொப்பியை பெற்றது யாரிடம் தெரியுமா ? – எத்தனையாவது வீரர் தெரியமா ?

Nattu
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 66 ரன்கள் குவிக்க இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் 303 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரரான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார்.

Pandya-4

இந்நிலையில் இந்த தொடரில் பேக்கப் வீரராக சேர்க்கப்பட்டு பிறகு நவ்தீப் சைனிக்கு பதிலாக இன்று ஒருநாள் அணியில் தனது அறிமுக போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடினார். தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு அளித்த அவர் ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை கைப்பற்றினார். துவக்க வீரரான மார்னஸ்ஸை கிளீன் போல்ட் செய்து தனது முதல் விக்கெட்டை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பதித்தார்.

Nattu 2

இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் 70 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் அறிமுகமான இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனும், சர்வதேச கிரிக்கெட்டின் ரன் மெஷினுமான விராட் கோலியிடமிருந்து இருந்து தனது ஒருநாள் தொப்பியினை பெற்றா. மேலும் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் 232 வீரர் என்ற பெருமையும் நடராஜன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement