நான் ஒன்றும் இந்தியாவிற்காக விளையாட ஆசைப்படல. இதற்காக மட்டும் தான் கிரிக்கெட் விளையாடுறேன் – முரளி விஜய்

Vijayy
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

muralivijay

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆண்டு வரை இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த முரளி விஜய் தற்போதைய இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு விளையாடிய அவர் சிறப்பாக விளையாடவில்லை என்ற காரணத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக பிரித்தி ஷா அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காயம் ஏற்பட்டதால் அகர்வால் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது முரளி விஜய் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : நான் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது பெருமையான விடயம் தான். ஆனால் இனிமேலும் நான் அணியில் விளையாடுவேன் மாட்டேனா என்ற எண்ணம் எல்லாம் எனக்கு எதுவும் இல்லை.

muralivijay

தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும். அது மட்டுமே எனது எண்ணம் நான் அணிக்கு தேர்வானாலும், ஆகாமல் போவதும் என் கையில் இல்லை. நான் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடவேண்டும் என்று நினைப்பதில்லை. என்னுடைய விருப்பம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே அதனால் நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன் இந்திய அணிக்காக நான் விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று முரளி விஜய் கூறினார்.

Advertisement