இந்தத் தொடரை நடத்தாமலே இருந்திருக்கலாம் தலையை பிய்த்துக் கொள்ளும் தேர்வாளர்கள் – விவரம் இதோ

Vijayy
- Advertisement -

இந்தியாவில் தற்போது தேசிய அணியில் விளையாடும் வீரர்களை தவிர மற்ற வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். அனைத்து மாநிலங்களும் அவரவர்கள் வீரர்களுடன் தனித்தனியாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.

Karthik-1

- Advertisement -

இந்த தொடரில் ஏற்கனவே ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் என அனைத்து வீரர்களும் அசத்தி வருகின்றனர். எனவே ஏற்கனவே இந்திய அணியில் நான்காவது வீரராக களமிறங்கும் வீரர் குறித்த பிரச்சனை இருப்பதால் இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் துவக்க வீரராக பல ஆண்டுகளாக இருந்த முரளி விஜய் சமீபத்தில் நடைபெற்று வரு டெஸ்ட் தொடர்களில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே தொடரின் நேற்றைய போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். எனவே அவர் மீண்டும் இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Murali vijay

நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய முரளி விஜய் 130 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. எனவே யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் தேர்வுக்குழுவினர் உள்ளனர். மேலும் இந்த தொடரில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடியதால் ரசிகர்கள் இந்த தொடரை நீங்கள் நடத்தாமல் இருந்து இருக்கலாம். அனைவரும் சிறப்பாக ஆடுகிறார்கள் என்று நகைச்சுவையாக கமெண்ட்டுகளை பதிவு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement