இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருரான தோனி நேற்று முன்தினம் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது இந்த பிறந்தநாளை ரசிகர்கள் #HappyBirthdayDhoni என்ற சிறப்பு ஹாஷ்டேக் மூலம் கொண்டாடி இணையத்தை தெறிக்க விட்டனர். மேலும் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலதரப்பட்ட திசைகளிலிருந்தும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்தது.
தோனியின் இந்த பிறந்த நாளுக்கு பலரும் பல விதங்களில் அவருக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் மும்பை மாநகர போலீஸ் தோனிக்கு வாழ்த்துக் கூறிய ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோனியின் பெயரை வைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அதே நேரத்தில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ள மும்பை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு புகைப்படத்தை மும்பை போலீசார் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.
Do it the ‘Mahi Way’ – Stay ‘Not Out’, Stay Cool & Stump #coronavirus
Happy Birthday, Captain Cool.#HappyBirthdayMahi #SocialDistancing pic.twitter.com/piH7jNFBIK
— Mumbai Police (@MumbaiPolice) July 7, 2020
அதில் “M S D” அதாவது “மகேந்திர சிங் தோனி” என்ற பெயரையே அவர்கள் விழிப்புணர்வு வாசகம் ஆக “Maintain Social Distancing” என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். மேலும் do it the “Mahi Way”, Stay NotOut, Stay Cool & Stump கொரோனா வைரஸ் என்று குறிப்பிட்டு ஹாப்பி பர்த்டே கூல் கேப்டன் என்று அவர்கள் பகிர்ந்துள்ளனர். மும்பை போலீசாரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்திய அணியின் இளம்வீரரான ஹார்திக் பாண்டியா தோனியை இந்த இக்கட்டான நேரத்திலும் ராஞ்சிக்கு நேரில் சென்று வாழ்த்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வர தற்போது மும்பை போலீசாரின் இந்த ட்வீட் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.