ப்ரித்வி ஷாவிற்கு போட்டியாக புதிதாக வந்துள்ள அடுத்த சச்சின் – விவரம் இதோ

Jaiswal-2
- Advertisement -

இந்தியாவில் தற்போது உள்ளூர் அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் ஜார்கண்ட் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பையை சேர்ந்த தொடக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என்ற 17 வயது சிறுவன் களமிறங்கினார்.

Jaiswal

- Advertisement -

இந்த போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர் சிறப்பான ஆட்டத்தால் அனைத்து பந்து வீச்சாளர்களின் மிரட்டினார். 154 பந்துகளை சந்தித்த அவர் 12 சிக்சர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் என 203 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் இரட்டை சதம் கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மேலும் அவரது இந்த அபார ரன்குவிப்பின் காரணமாக மும்பை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. இவர் 17 வயது 292 நாட்களில் தனது இரட்டை சதத்தை அடித்து உள்ளார். அதாவது சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் உள்ளூர் கிரிக்கெட் ஆகிய இரண்டிலும் சேர்த்து குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jaiswal 1

நடப்பு விஜய் ஹசாரே தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். இதற்கு முன்னதாக கேரள வீரர் சஞ்சு சம்சன் இந்த தொடரில் இரட்டை சதம் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா இந்திய அணியில் இடம் பெற்றுள்ளதால் அவரின் இடத்தை பிடிக்க தற்போது மும்பையில் இருந்து அடுத்த வீரர் தயாராகி வந்துள்ளதாக மும்பை பத்திரிகைகள் தற்போது சமூக வலைதளங்களில் இவரது செய்தியை பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement