டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகே ஆச்சரியப்படும் வகையில் பும்ரா, பாண்டியா மற்றும் பண்ட் சாதிக்க இவர்களே காரணம் – விவரம் இதோ

pantt
- Advertisement -

இந்திய அணி உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியாகின. இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழு குறித்தும் பல முன்னாள் வீரர்கள் கருத்தினை அறிவித்திருந்தனர்.

bumrah 2

- Advertisement -

அதிலும் குறிப்பாக கவாஸ்கர் இந்திய அணித் தேர்வுக்குழு வினை நொண்டி வாத்து எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் அவர் மற்றொரு விடயத்தையும் தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார். அதன்படி அவர் கூறியதாவது : எங்களுடைய தேர்வுக்குழுவை குறித்து சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

ஆனால் நாங்கள் இந்திய அணிக்கு தரமான சில வீரர்களை உருவாக்கி உள்ளோம். அதிலும் குறிப்பாக பும்ரா, பாண்டியா மற்றும் பண்ட் ஆகியோர் கிரிக்கெட் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர். மேலும் பும்ரா, பாண்டியா ஆகியோர் வெறும் டி20 போட்டிகளில் சாதிப்பார்கள் என்று நினைத்து நிலையில் நாங்கள் அவர்களை தேர்வு செய்து டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தோம். டெஸ்ட் போட்டிகளிலும் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

pandya 2

அதே போன்று தோனிக்கு பதிலாக பண்ட்டை டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தினோம். அவரும் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுக தொடரில் சதம் அடித்தார். எனவே இவர்கள் மூவரை போல பல புதிய திறமையான இளம் வீரர்களை நாங்கள் இந்திய அணிக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். எனவே எங்கள் தேர்வு குழு பற்றி எவரும் தவறாகப் பேச எதுவுமில்லை நடப்பது நன்றாக நடக்கும் என்று பிரசாத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement