ஐ.பி.எல் தொடரை வைத்து உலகக்கோப்பை அணியின் தேர்வு இருக்காது – எம்.எஸ்.கே பிரசாத்

Prasad
- Advertisement -

2019ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட தயார் என்றே கூறவேண்டும்.

worldcup

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து முக்கிய தகவலினை இந்திய அணியின் தேர்வுகுழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக ஆடுபவர்கள், இந்த தொடரினை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்திய அணி தேர்வு இருக்காது.

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை நாங்கள் ஏற்கனவே தயார் செய்து நிலுவையில் வைத்துளோம். அதன்படி இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்படுவார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இடம் மாறினாலும், வீரர்கள் பெரிதளவில் மாற்றப்படபோவது கிடையாது. எனவே, ஆஸ்திரேலிய தொடரில் ஆடிய இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் ஆடுவார்கள்.

india

மேலும், இதுகுறித்த தகவல் மற்றும் இந்திய அணியின் முழுவிவரமும் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். அவர்களே 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார்கள் என்று தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறினார்.

Advertisement