இனி தோனியின் இந்த முடிவு குறித்து கருத்து கூற எதுவுமில்லை. எல்லாம் அவர் கையில் தான் உள்ளது – எம்.எஸ்.கே பிரசாத்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனி இந்த இரண்டு மாத ஓய்வினை பேராஷூட் ரெஜிமன்ட் பிரிவில் பயிற்சி பெற முடிவு செய்திருந்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான தொடரில் அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

dhoni

- Advertisement -

இந்நிலையில் நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்வுக் குழுவின் தலைவர் எம் எஸ் கே பிரசாத் தோனி குறித்து கூறியதாவது : தோனி ஓய்வு குறித்து இனியும் பேச எதுவும் இல்லை.

இந்திய அணிக்காக இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த மிகச் சிறந்த கேப்டன் தோனி. அவர் ஒரு ஜாம்பவான் இது போன்ற மிகச் சிறந்த வீரருக்கு எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று அவர்களுக்கே தெரியும். அவரின் ஓய்வு அவர் கையில்தான் உள்ளது எங்களிடம் எந்த முடிவும் கிடையாது.

dhoni 2

மேலும் இதில் பிசிசிஐ தலையிடாது அதேசமயம் இந்திய அணியின் வருங்காலத்தை கணக்கில் கொண்டு இளம் வீரரான பண்ட்டுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரசாத் கூறினார்.

Advertisement