வீடியோ : ரிஷப் பண்ட் போட்ட இன்ஸ்டா லைவ். கட் பண்ணி வெளியேறிய தோனி – ஏன் தெரியுமா?

Rishabh-Rohith-MS
- Advertisement -

ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் இன்று இந்திய அணி தங்களது மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கும் ஓய்வில் இருக்கும் சீனியர் வீரர்கள் தங்களது நாட்களை பொழுதுபோக்காக ஜாலியாக கழித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் டி20 தொடரில் இந்திய அணியுடன் இணைய காத்திருக்கும் முன்னனி விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தற்போது ஓய்வில் இருப்பதனால் இன்ஸ்டாகிராம் மூலம் லைவ் ஒன்றில் வந்தார். அதில் சக வீரர்களான கேப்டன் ரோஹித் மற்றும் சூரியகுமார் யாதவ் உடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவ்வேளையில் மேலும் இந்த லைவில் யாரையாவது சேர்க்கலாமா? என்று ரசிகர்களிடம் கேட்டார். அதற்கு பெரும்பாலான ரசிகர்கள் தோனியை இன்ஸ்டாகிராம் லைவில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். எனவே உடனடியாக ரிஷப் பண்ட் தோனியையும் இன்ஸ்டாகிராம் லைவில் இணைத்தார்.

- Advertisement -

அப்போது முதலில் போனை எடுத்த தோனியின் மனைவி சாக்ஷி ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு தோனியின் முகத்தை காண்பித்தார். ஆனால் சாக்ஷி இடம் இருந்து போனை வாங்கிய தோனி ஹாய் மட்டும் சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : 2023ஐ தொடர்ந்து மற்றுமொரு உலகக்கோப்பையை நடத்தும் இந்தியா – அதிகாரப்பூர்வ அறிவிப்பின் முழுவிவரம்

தோனி இந்த லைவை கட் செய்ததற்கு காரணம் யாதெனில் பொதுவாகவே சமூக வலைதளத்தில் தோனி பெரிதளவு நாட்டம் காண்பிக்க மாட்டார். அதோடு எப்போதுமே சமூக வலைதளத்தில் இருந்து தள்ளி இருக்கும் தோனிக்கு இதுபோன்ற விடயங்கள் செட்டாகாது என்பதனாலே அவர் இந்த லைவை கட் செய்துவிட்டு வெளியேறிவிட்டார்.

Advertisement