ரோஹித் நல்லா சிக்கிட்டாரு.. விராட் கோலி இருந்திருந்தா கதையே வேற.. மான்டி பனேசர் கருத்து

Monty Panesar 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதல் 3 நாட்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனால் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 4வது நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய ஹைதராபாத் பிட்ச்சில் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது.

அதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்திய அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2வது போட்டியிலிருந்து காயத்தால் விலகியுள்ளது பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. அதற்கு முன்பாகவே முதலிரண்டு போட்டிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்பதும் முதல் போட்டியிலேயே இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது.

- Advertisement -

விராட் கோலி இருந்துருந்தா:
இந்நிலையில் முதல் போட்டியில் விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்ததாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார். குறிப்பாக விராட் கோலி இருந்திருந்தால் ஆக்ரோஷமான வார்த்தைகளை சொல்லி ஸ்லெட்ஜிங் செய்து இங்கிலாந்தின் விக்கெட்டை எடுக்க முயற்சித்திருப்பார் என்று பனேசர் கூறியுள்ளார்.

மேலும் தற்போது விராட் கோலி இல்லாமல் 2வது போட்டியில் வென்று காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ரோகித் தள்ளப்பட்டுள்ளதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து வீரர்கள் சுதந்திரமாக விளையாடுவதை இந்தியா நிறுத்த வேண்டும். ஒருவேளை விராட் கோலி இருந்திருந்தால் இந்த இங்கிலாந்து வீரர்களின் முகத்திற்கு நேராக சென்று “மீண்டும் அடியுங்கள். நீங்கள் எந்தளவுக்கு தரமானவர் என்பதை பார்க்கலாம்” என்று சொல்லியிருப்பார்”

- Advertisement -

“இருப்பினும் தற்போதைய இங்கிலாந்து அணி தோற்பதற்கு பயப்படக்கூடியவர்கள் அல்ல. எனவே அடுத்த 4 போட்டிகளிலும் இங்கிலாந்து தோல்விக்கான பயமின்றி விளையாடுவார்கள். விராட் கோலி எப்போதும் இருப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவார். அது தற்போதைய இந்திய அணியில் இல்லை. ஒருவேளை அடுத்த போட்டியில் இங்கிலாந்து வென்றால் இந்தியா மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாகி விடும்”

இதையும் படிங்க: அவரோட கஷ்டத்தை படிச்சி பாத்த எனக்கு கண்ணீரே வந்துடுச்சி.. இளம்வீர் குறித்து – ஏ.பி.டி நெகிழ்ச்சி

“எனவே விராட் கோலி இல்லாமல் அனைத்தையும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள ரோஹித் சர்மா தற்போது பெரிய தருணத்தில் இருக்கிறார்” என்று கூறினார். இதை தொடர்ந்து இத்தொடரின் முக்கியமான 2வது போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. அதில் ஜடேஜா மற்றும் ராகுலுக்கு பதிலாக விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement