ஜடேஜா விஷயத்தில் இந்திய அணி எடுத்த இந்த முடிவு முற்றிலும் தவறானது – ஆஸ்திரேலிய வீரர் கோபம்

Hendriques
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் நேற்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.

INDvsAUS

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் 51 ரன்களையும், இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தும் அசத்தினர். மொத்தத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் பின்ச் மற்றும் ஷார்ட் ஆகியோர் முறையே 35, 34 ரன்கள் அடித்தன.ர் இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோன்று ஜடேஜாவுக்கு பதிலாக பந்துவீசிய சாஹல் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டி20 தொடரில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Jadeja

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து ஜடேஜாவின் கன்கஷன் விதிமுறையில் உள்ள பிரச்சனை குறித்து ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆர்டர் ஒன்றான மொய்ஸஸ் ஹென்ரிக்ஸ் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நேற்றைய போட்டியில் ஜடேஜாவிற்கு பதிலாக சாஹலை களமிறக்கியது முற்றிலும் தவறான ஒன்றாகும். ஏனெனில் கன்கஷன் விதிமுறைப்படி “லைக் பார் லைக்” என்ற முறையிலேயே வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அதாவது ஜடேஜா ஒரு ஆல்ரவுண்டர் அவருக்கு பதிலாக ஒரு ஆல்ரவுண்டர் தேர்வு செய்திருக்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் முழுநேர பந்துவீச்சாளராக இருக்கும் சாஹலை தேர்வு செய்தது முற்றிலும் விதிமுறைக்கு எதிரானது என்று நான் கருதுகிறேன். ஆனாலும் மருத்துவர்கள் ஜடேஜா விளையாட முடியாது என்று கூறியது ஏற்றுக்கொள்ள தான் ஆக வேண்டும். ஏனெனில் மருத்துவர்களுக்கு தான் வீரர்களின் உடல் தகுதி என்ன என்று தெரியும். அதனால் அவர்களின் முடிவில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

Chahal

இருப்பினும் கன்கஷன் விதிமுறைப்படி வீரர்களை சேர்ப்பதை பற்றியே நான் என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன். அதன்படி எந்த வீரருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறதோ அதே தகுதியுடன் அணியில் இருக்கும் வீரரை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் ஒரு ஆல்ரவுண்டர்க்கு பதிலாக ஒரு முழுநேர பந்து வீச்சாளரை இந்திய அணியில் மாற்று வீரராக தேர்வு செய்தது தவறு என காட்டமாக தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement