இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணியானது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டுவது, இந்திய வீரர்கள் இங்கிலாந்து வீரர்களை சீண்டுவது என போட்டி பரபரப்பாக சென்றது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் இந்த மோதல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
ஏனெனில் மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய வீரர் சிராஜை சீண்டி தங்களது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடருக்காக அங்கு சென்றிருந்தபோது இனவெறி ரீதியாக சிராஜ் சில சம்பவங்களை சந்தித்தார். அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து ரசிகர்கள் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த சிராஜ் மீது பந்துவீசி அவரை சீண்டியுள்ளனர்.
These english fans have no idea who they’re messing with.
Miyaan bhai 🔥 @mdsirajofficial !!#INDvENG #ENGvIND #Siraj pic.twitter.com/zifHYiwQdJ
— Cover Drive (@KohliChokaMarNa) August 25, 2021
அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணியின் ரன் என்ன என்று அவரிடமே கேட்டனர். அதற்கு பதிலடி கொடுத்த சிராஜ் இங்கிலாந்து ரசிகர்களை நோக்கி நாங்கள் இந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை வென்று விட்டோம். இங்கிலாந்து பூஜ்ஜியத்தில் உள்ளது என்பது போல சைகை செய்தார். அவரது இந்த சைகை தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.