வெறும் 2 நாள் தான்.. உங்க 2 பேருக்கும் இதான் வாழ்நாளின் கடைசி சான்ஸ்.. விராட், ரோஹித்தை எச்சரித்த கைப்

Mohammad Kaif 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்காவுக்கு சென்று பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் 6ஆம் தேதி இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதன் பின் ஜூன் 9ம் தேதி நியூயார்க் நகரில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்வது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் ஜாம்பவான்களாக போற்றப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த 10 வருடங்களில் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். ஆனால் ஜாம்பவான் வீரர்களாக உருவெடுத்த பின் அவர்கள் இந்தியாவுக்காக ஒரு உலகக் கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். கடைசியாக தோனி தலைமையில் அவர்கள் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை இளம் வீரர்களாக வென்றனர்.

- Advertisement -

கைப் எச்சரிக்கை:
அதன் பின் கடந்த 10 வருடங்களில் நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் விளையாடிய இந்த ஜோடி நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறது. இதில் ரோகித் சர்மாவாவது 2007 டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளார். ஆனால் விராட் கோலி 2014, 2016இல் தொடர்நாயகன் விருதுகளை வென்ற போதிலும் ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இதுவே கடைசி டி20 உலகக் கோப்பை வாய்ப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார். ஏனெனில் 35 வயதை கடந்து விட்ட அவர்களுக்கு பதிலாக பிசிசிஐ இளம் வீரர்களை கொண்டு வந்து விடும் என்று கைப் எச்சரித்துள்ளார். எனவே செமி ஃபைனல் மற்றும் ஃபைனல் ஆகிய 2 நாட்களில் சிறப்பாக விளையாடி வெல்லுமாறு கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாம் நீண்ட காலம் விளையாட போவதில்லை என்பது ரோகித் சர்மாவுக்கு தெரியும். இன்னும் 2 – 3 வருடங்கள் மட்டுமே உள்ளன. விராட் கோலிக்கும் இதே நிலை தான். எனவே இது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு கடைசி வாய்ப்பு. அவர்கள் அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்தனர். அத்தொடரில் சிறப்பாக விளையாடியும் கோப்பை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதால் இதயங்கள் உடைந்தன”

இதையும் படிங்க: இப்படியும் மனிதர்கள் இருக்காங்களா.. உண்மையான இந்தியாவை பார்த்து வியந்து போன ஜஸ்டின் லாங்கர்.. நெகிழ்ச்சி

“ரசிகர்கள் நொறுங்கினர். இம்முறை லீக் சுற்றில் இந்தியாவுக்கு பெரியளவில் போட்டியில்லை. செமி ஃபைனல் மற்றும் ஃபைனல் ஆகிய போட்டிகள் மட்டுமே இந்தியாவுக்கு கடினமாக இருக்கும். நீங்கள் அந்த 2 நாட்களுக்கு தயாராக இருக்கிறீர்களா? இதுவே ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சோதனையாகும்” என்று கூறினார்.

Advertisement