- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதே தப்பை மறுபடியும் செய்யாதீங்க.. துபேவுக்கு பதில் அவரை கொண்டு வாங்க.. மைக்கேல் வாகன் அட்வைஸ்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த வருடம் முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக 119 ரன்களை கட்டுப்படுத்தி மகத்தான வெற்றி பெற்றது. அதே வேகத்தில் அமெரிக்காவையும் வீழ்த்திய இந்தியா குரூப் சுற்றின் முடிவில் 7 புள்ளிகளை பெற்றது.

இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 20ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது. முன்னதாக இந்தியா தங்களுடைய லீக் சுற்று முழுவதையும் வேகத்துக்கு சாதகமான பிட்ச்களை கொண்ட அமெரிக்காவில் விளையாடியது. ஆனால் இந்தியாவின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற உள்ளது.

- Advertisement -

துபேவுக்கு பதில்:
அதனால் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தார் போல் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தங்களுடைய பேட்டிங் வரிசையில் ஜெய்ஸ்வாலை ஓப்பனிங்கில் களமிறக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். கடந்த ஐசிசி தொடர்களில் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன்கள் கூட இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே அதே தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கும் அவர் ரிஷப் பண்ட்டை 5வது விளையாட வைத்து பந்து வீசாத சிவம் துபேவை பெஞ்சில் அமர வைக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் ஓப்பனிங்கில் பேட்டிங் செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன்”

- Advertisement -

“அதற்காக 3வது இடத்தில் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா ஆகிய எந்த வலது கை பேட்ஸ்மேன் களமிறங்கினாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன். சிவம் துபே ஐந்தாவது இடத்தில் விளையாடுகிறார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் அங்கே நான் ரிஷப் பண்ட்டை பார்க்க விரும்புகிறேன். ஜெய்ஸ்வால் அற்புதமான வீரர். எனவே நல்ல பேட்ஸ்மேனான அவர் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவுடன் ஏற்பட்ட விரிசலால் சுப்மன் கில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபடுகிறாரா? பேட்டிங் கோச் பதில்

“உண்மையில் இந்திய டாப் ஆடரில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை. அந்தத் தவறை கடந்த காலங்களில் இந்தியா செய்தனர். எனவே இம்முறை ஜெய்ஸ்வால் என்னுடைய இந்திய அணியில் இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கடந்த வருடம் அறிமுகமான ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடினார். எனவே இந்த வருடம் ஓப்பனிங்கில் விராட் கோலி தடுமாறுவதால் அவரை துவக்க வீரராக இறக்குவது நல்ல முடிவாகவே இருக்கும்.

- Advertisement -