இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரில் 3 க்கு 2 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி தற்போது டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதற்கடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது.
இருப்பினும் இன்னும் 7 மாதங்கள் இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் இந்த டி20 தொடருக்கான எதிர்பார்ப்புதான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. மேலும் இந்திய அணியில் உள்ள வீரர்கள் எவ்வாறு உலக கோப்பை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பது குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. அதன் படி இந்த தொடரில் நிறைய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த தொடரில் காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் கல்யாண விடுப்பு காரணமாக பும்ரா ஆகிய இருவரும் இந்த தொடரில் விளையாடவில்லை. இவர்கள் இருவர் இல்லாமலேயே இந்திய அணி இந்த தொடரில் சிறப்பான வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் பதிவிட்டுள்ள கருத்தில் : இந்தியா இந்த தொடரை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஒரு சிறந்த அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது. பும்ராவும், ஜடேஜாவும் இந்தியன் இந்திய அணியில் இணையும் போது இந்திய சூழ்நிலையில் அவர்கள் உலக கோப்பையை வெல்வதற்கு அது பெரிய அளவில் சாதகமாக இருக்கும்.
India have adapted brilliantly in this series … the better team have won … Add @Jaspritbumrah93 & @imjadeja to this team in Indian conditions & they are favourites to win the T20 World Cup … Great series to watch .. #INDvsENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 20, 2021
இந்த தொடரை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது எனவும் மைக்கல் வாகன் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிதான் இறுதிப்போட்டியில் மோதும் என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.